உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவியரை சீண்டிய கிளீனருக்கு போக்சோ

மாணவியரை சீண்டிய கிளீனருக்கு போக்சோ

பூந்தமல்லி, : பூந்தமல்லி அருகே, பள்ளி வேனில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர்,'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இயங்கும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும் வேனின் கிளீனராக, நசரத்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர், 32, என்பவர் பணியாற்றினார்.இவர், வேனில் மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி ஒருவர், பெற்றோரிடம் கூற, அவர்கள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார், சம்பந்தப்பட்ட கிளீனர் ஞானசேகரை பிடித்து விசாரித்த போது, மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.இதையடுத்து அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி