உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் சிமென்ட் சிலாப் சேதம்

மழைநீர் வடிகால்வாய் சிமென்ட் சிலாப் சேதம்

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்ட சிமென்ட் சிலாப் உடைந்துள்ளதால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நினைவிடம் அருகே, சர்வீஸ் சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் மீது உள்ள சிமென்ட் சிலாப் உடைந்து சேதமடைந்துள்ளது.இதனால், போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றன.மேலும், இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.எனவே, சர்வீஸ் சாலையில் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்வாய் மீது மூடி அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை