உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 13 ஊராட்சிகளில் நாளை கிராம சபை

13 ஊராட்சிகளில் நாளை கிராம சபை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு, செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.தற்போது, 13வது சுற்றுக்கு கிளார், பெரும்பாக்கம், குண்ணவாக்கம், வேண்பாக்கம், உள்ளாவூர், மதுரமங்கலம், காந்துார், ஆதனுார், மாடம்பாக்கம், அழிசூர், சாத்தனஞ்சேரி, ஆகிய ஊராட்சிகளில், நாளை காலை 11:00 மணிக்கு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ