உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த எட்டு கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக நுழைவாயிலில் துவங்கிய எட்டு கி.மீ., நடைபயிற்சி இயக்கத்தை, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நடைபயிற்சியில் தொற்றாநோய் தடுப்பு திட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, காஞ்சிபுரம் நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க தலைவர் சிவகுமார் சுந்தரம், மருத்துவ துறை அலுவலர்கள், பணியாளர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 90 பேர் பங்கேற்றனர்.உத்திரமேரூர் வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை