சேதமான குளக்கரை சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக் காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை உள்ளது.இந்நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், குளத்தை ஒட்டியுள்ள பகுதியில் சிமென்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டு உடைந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சின்ன வேப்பங்குளக்கரையில், சேதமடைந்த பழைய சிமென்ட் சாலையை அகற்றி புதிதாக சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.