| ADDED : மார் 14, 2024 01:56 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், வேலுார், ஆற்காடு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தின் அருகில் உள்ள சாலையில், ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.மேலும், பாதசாரிகள் நடந்து செல்லும் இடத்தில், பெரிய கல் ஒன்று சாலையில் புதைந்த நிலையில் உள்ளது. இதனால், பேருந்தை பிடிக்க ஓடும் பாதசாரிகள் கவனகுறைவாக கால் இடறி கல்லில் இடித்துக் கொண்டு விழுந்து ரத்த காயமடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, பயணியர் காயமடையும் நிலையில், பல்லாங்குழி சாலையாக மாறியுள்ள பேருந்து நிலைய சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.