உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முத்தாலம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

முத்தாலம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

புத்தேரி:புத்தேரி ஊராட்சி, மேட்டு நகரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழாவையொட்டி, நேற்று, காலை 6:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், காலை 10:30 மணிக்கு கிராம தேவதை பூங்கரகமும் வீதியுலாவும் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் முத்தாலம்மன் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை