உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடமேல்பாக்கம் சந்திப்பு சிறுபாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

வடமேல்பாக்கம் சந்திப்பு சிறுபாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரியில் இருந்து, ஒரத்துார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியே, நீலமங்கலம், குத்தனுார், ஏரிவாக்கம், காவனுார், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில், பெரும் பகுதிகளில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மேலும், இந்த சாலையில் வடமேல்பாக்கம் சந்திப்பில் உள்ள வளைவில் தடுப்பு இல்லை. இதனால், வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள், தடுப்பு இல்லாததால் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆபத்தான வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை