மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்
உத்திரமேரூர்:மருதம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவ - மாணவியரின் கற்றல் திறனை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று கேட்டறிந்தார். அதை தொடர்ந்து, களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 2022 -- 23ல் செயல் படுத்தப்பட்ட, பசுமை பள்ளி திட்டத்தை ஆய்வு செய்தார். பெரிய ஆண்டித் தாங்கல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.