உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சியில் முப்பெரும் விழா

 காஞ்சியில் முப்பெரும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குரு பங்காரு சித்தர் அம்மாவின் 85வது ஆண்டு அவதார விழா, மன்ற 43வது ஆண்டு விழா, தைப்பூச பெருவிழாவையொட்டி சக்தி மாலை அ ணிவித்து, விரதம் ஆரம்பித்தல் விழா நடந்தது. விழாவையொட்டி காஞ்சிபுரம் திருக்கச்சி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சக்தி கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேல்மருவத்துார் ஆதிபாரசக்தி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் தலைமையில் சிறப்பு கலச யாக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சக்தி மாலை அணிவித்து விரதத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி