உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல் போன் மூலம் பம்ப்செட் கட்டுபடுத்தும் கருவி மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

மொபைல் போன் மூலம் பம்ப்செட் கட்டுபடுத்தும் கருவி மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்:தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மொபைல் போனால் இயங்கும் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்ப் செட்டுகளை இயக்கச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது, பாம்புக்கடி, விஷப்பூச்சுக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில், பம்ப் செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்டுகளை தொலைவில் இருந்து மொபைல் போன் மூலம் இயக்கி கண்காணிக்கவும் மோட்டாரை நிறுத்தவும் முடியும்.ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 7,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில், 40 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் மானியமாக வேளாண் பொறியியல் துறை வழங்குகிறதுஇத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் பொறியியல் அலுவலர்களை 94440 73322 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை