உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருச்சி டி.ஐ.ஜி., கரூரில் நேரில் ஆய்வு

திருச்சி டி.ஐ.ஜி., கரூரில் நேரில் ஆய்வு

கரூர்: திருச்சி சரக டி.ஐ.ஜி., அமல்ராஜ் நேற்று காலை எஸ்.பி., அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். மாவட்ட எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் வருடந்தோறும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு பணி நடத்துவது வழக்கம். நேற்று காலை 9 மணிக்கு கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் தனிப்பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது எஸ்.பி., நாகராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கும்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை