உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடக்கப்பள்ளியில் நுாலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொடக்கப்பள்ளியில் நுாலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர்: காணியாளம்பட்டி ஊர்ப்புற நுாலகம் சார்பில், காணியாளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்-கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், இளம் வயதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், புத்தக கண்காட்சி நடந்தது. மேலும் புத்தக பயன்பாடு, புத்தகம் வாசிப்-பதால் ஏற்படும் பயன்கள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பிறகு, மாணவ, மாணவிகளுக்கு நுாலக அடை-யாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை-யாசிரியர் தனலட்சுமி, ஊர்ப்புற நுாலகர் செந்தில் குமார், உதவி ஆசிரியர் இனியவள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி