உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்

பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்

பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்கரூர், ஆக. 21-கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 58; இவர் கடந்த, 18 மாலை மகன் மணிகண்டன், 32; என்பவருடன் யமஹா பைக்கில், கரூர்-வாங்கல் சாலை புதுப்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். பைக்கை மணிகண்டன் ஓட்டினார். அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறியதில், இரண்டு பேரும் கீழே விழுந்தனர். அதில், தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சங்கர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ