உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமையில், அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று காலை ஆர்ப்-பாட்டம் நடந்தது.அதில், மேற்குவங்க மாநிலத்தில் பி.ஜி., மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்-டித்தும், மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதலை தடுக்க சிறப்பு சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கொலை செய்யப்பட்ட பி.ஜி., மருத்துவருக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை