உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுார் டவுன் பஞ்.,ல் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

மருதுார் டவுன் பஞ்.,ல் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்,, சாதாரண கூட்டம் நடைபெற்றது.டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சரவணகுமார் தீர்மானங்களை வாசித்தார். மேட்டு மருதுார். குப்புரெட்டி பட்டி, பணிக்கம்பட்டி இந்திராகாலனியில் மழைநீர் வடிகால், மருதுாரில் குடிநீர் தொட்டி மராமத்து பணி, சிவன் கோவில் அருகில் பூங்கா அமைத்தல் என, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், டவுன் பஞ்., அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்