உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு 13,000 கனஅடி நீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு 13,000 கனஅடி நீர் வரத்து

கரூர்: மாயனுார் கதவணைக்கு நேற்று, 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்தானது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13 ஆயிரத்து, 676 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 206 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.54 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8.00 மணி நிலவரப்படி கடந்த, 24 மணி நேரத் தில் கரூரில், 4.40 மி.மீ., மழையும், மாயனுாரில், 2 மி.மீ., மழையும் பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி