உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் மணல் மூட்டை கடத்தல் 2 பேர் கைது;இருவர் தலைமறைவு

பைக்கில் மணல் மூட்டை கடத்தல் 2 பேர் கைது;இருவர் தலைமறைவு

குளித்தலை, குளித்தலை காவிரி ஆற்றில், இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக பைக்கில் மணல் மூட்டை கடத்துவதாக வந்த தகவலின் படி, நேற்று அதிகாலை 2:30 மணியளவில் எஸ்.எஸ். ஐ., சிங்காரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வதியம் பிரிவு ரோட்டில், வேகமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். கண்டியூரை சேர்ந்த கணேஷ், 22, நிதிஷ் குமார், 23, ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள், ரஞ்சித், கார்த்திக் உதவியுடன் பைக்கில் மணல் கடத்தியதாக தெரிவித்தனர்.குளித்தலை போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிந்து கனிஷ், நிதிஷ்குமார் ஆகியோரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித், கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை