| ADDED : டிச 30, 2025 05:26 AM
குளித்தலை; குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர், காவிரி ஆற்றுப்படுகை செல்லாண்டி அம்மன் கோவில் பகுதியில், ஆற்று மணல் கடத்துவதாக மாயனுார் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக்கிற்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நான்கு மாட்டு வடியில் மணல் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, ஒரு யூனிட் மணல் கடத்திய, 4 டயர் மாட்டு வண்டிகளை பிடித்து மாயனுார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.இதில், மாட்டு வண்டி உரிமையாளர்கள், மணவாசி சத்ரியன், 25, ஆறுமுகம், 55, மலைக்கள்ளன், 46, இளங்கோவன், 43, ஆகிய நான்கு பேர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மாயனுார் போலீசார் வழக்குப்பதிந்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்