ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை
குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஆதனுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், தனியார் நிலத்தினர், தங்கள் நிலப்பகு-தியில் வரக்கூடாது என தெரிவித்து விட்டனர். எனவே, இறந்தவர்-களின் சடலங்களை அடக்கம் செய்ய, நிரந்தரமான மயானத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள், கலெக்-டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.