| ADDED : நவ 24, 2025 01:21 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிரா-மத்தில் அன்ன காமாட்சி, மாசி பெரியண்ணன் கோவில் புனர-மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், கிராம மக்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மாலை, 5:00 மணிக்கு, புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி பூஜை உடன் முதல் கால யாக வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையுடன் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி-யார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபி-ஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை முடிந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாக்குழு சார்பில் அன்ன-தானம் வழங்கப்பட்டது.கிராம மக்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்-தனர்.