உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடக்கம்மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்கரூர், நவ. 17-கார்த்திகை மாதம் தொடங்கியதால், கரூரில் ஐயப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.கேரளா மாநிலம், சபரிமலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக, நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில், 48 நாட்கள் விரதம் இருந்து, சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.கரூர் ஐயப்பன் சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை மூலவர் சிலைக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதைதொடர்ந்து, விரதம் தொடங்கிய பக்தர்கள் மாலை அணிந்தனர்.அதேபோல், வெண்ணைமலை ஐயப்பன் கோவில், கருப்பத்துார் ஐயப்பன் கோவில், காந்தி கிராமம் ஐயப்பன் கோவில்களிலும், பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல, நேற்று மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் காவிரி ஆற்றின் கரை அருகில் ஐயப்பன் கோவில் உள்ளது. ஆற்றில் பக்தர்கள் குளித்து விட்டு, காவி துணி அணிந்து வந்து, முறைப்படி ஐயப்பன் சன்னதியில் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கரூர், குளித்தலை, லாலாப் பேட்டை, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மணவாசி, மாயனுார், புலியூர், சேங்கல், தோகைமலை, கழுகூர் பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ