உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுவனை தாக்கிய பெண் மீது வழக்கு

சிறுவனை தாக்கிய பெண் மீது வழக்கு

குளித்தலை, குளித்தலை அடுத்த ஆதனுார் பஞ்., உட்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி கவிதாபாரதி, 30. இவரது மகன் மகேந்திர பிரசாத், 15, கடந்த 26 மதியம் 2:00 மணியளவில் தன் வீட்டின் அருகே இருந்த மரத்தை வெட்டிய போது, அதே ஊரை சேர்ந்த அழகம்மாள், 52, என்பவர் தகாத வார்த்தையால் திட்டியதுடன், தடியால் அடித்துள்ளார். இதில் சிறுவன் மகேந்திர பிரசாத்துக்கு வலது நெற்றி அருகே சிறுகாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனை மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிறுவனின் தாய் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் அழகம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை