உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

கரூரில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

கரூர்: கரூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா, நேற்று அதி--காலை கோலாகலத்துடன் நடந்தது.ஏசு கிறிஸ்து பிறந்த நாளை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த-வர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். நேற்று அதிகாலை, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கரூர் வடக்கு பிரதட்சிணம் சாலையில் உள்ள புனித குழந்தை தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இசைக்கருவிகளை இசைத்தும், பாடல்-களை பாடியும் வழிபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதே போல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில், நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ