உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளி முன் சேதமடைந்த குழாய்: சீரமைக்க வலியுறுத்தல்

அரசு பள்ளி முன் சேதமடைந்த குழாய்: சீரமைக்க வலியுறுத்தல்

கரூர்: கரூர் அருகே, அரசு பள்ளி முன் சேதமடைந்த நிலையில் உள்ள, போர்வெல் குழாயை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், கோம்புபாளையம் பஞ்சாயத்து, நொய்யலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், தொடக்கப்பள்ளிக்கு முன் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வசதிக்காக, போர்வெல் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், குடிநீர் வீணாகிறது.மேலும், குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் பள்ளி முன் தேங்கி, சுகாதார கேடு மற்றும் கொசு உற்பத்தியை ஏற்படுத்துகிறது. வரும், 10ல் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே, நொய்யல் அரசு தொடக்கப்பள்ளி முன் உள்ள, உடைந்த போர்வெல் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்