உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி, சேங்கல், புனவாசிப்-பட்டி, மகிளிப்பட்டி, மேட்டுப்பட்டி, சந்தியமங்கலம், வயலுார், சரவணபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், நாட்டுக்கோழிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். வளர்ந்த கோழிகளை, அருகில் உள்ள சந்தையூர், சேங்கல், உப்பிடமங்களம் ஆகிய பகு-திகளில் செயல்படும் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக நாட்டுக்கோழி வளர்ப்பு சரிவால், விற்ப-னைக்கு குறைவான கோழிகளையே விவசாயிகள் கொண்டு வந்-தனர். இதனால், கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 480 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 530 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடைகளில், கிலோ, 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை