உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம்:பீதியில் மக்கள்

கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம்:பீதியில் மக்கள்

கரூர்: கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் விபத்து பயத்தில் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.கரூர் தான்தோன்றிமலை அருகே, கருப்பன் கவுண்டன்புதுார் பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை, பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்கப்படும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சாலை அமைக்கும் பணி முடிந்து பிறகு மின் கம்பம் மாற்றி அமைக்கவில்லை. தற்போது மின் கம்பம் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. மேலும், தின்னப்பா நகர், காந்தி கிராமம் பகுதியில் இருந்து வரும் பள்ளி வாகனங்கள், கருப்பகவுண்டன்புதுார் பகுதி வழியாக தான் தோன்றிமலைக்கு செல்கிறது. அப்போது, சாலை நடுவே உள்ள, மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கருப்பன்கவுண்டன்புதுாரில், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றகோரி, பல முறை கோரிக்கை வைத்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோர், மின் கம்பத்தில் மோதி காயம் அடைகின்றனர். சிறிய அளவிலான விபத்து ஏற்படும் போதெல்லாம், மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ