உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலைவாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை

நாமக்கல், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.அதில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தனியார்துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமையில் நடந்தது. அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 17 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட, 113 பேர் பங்கேற்றனர். அதில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்