உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காய்கறி சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம்

காய்கறி சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் புறங்களில், காய்கறி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், கோவக்குளம், தாராபுரத்தனுார், கோவில்பட்டி, தேசிய மங்களம், புதுப்பட்டி பகுதிகளில் காய்கறி சாகுபடி நடந்துள்ளது. சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகளுக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வெண்டை, கத்திரிக்காய்களை பறித்து விவசாயிகள் கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. தற்போது கத்திரிக்காய் கிலோ, 50 ரூபாய், வெண்டைக்காய் கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை