பணம் வைத்து சூதாட்டம்; க.பரமத்தியில் 6 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி போலீஸ் எஸ் ஐ., சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், ஈ.வெ.ரா., நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக சுரேஷ், 33, ரமேஷ், 47, செல்வராஜ், 47, கிருஷ்ணன், 45, ராமலிங்கம், 47, சுப்பன், 65, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 10 ஆயிரத்து, 420 ரூபாயை, க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்.