உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து முன்னணி அஞ்சலி
கரூர்:காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், ஹிந்து முன்னணி சார்பில் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமை வகித்தார். நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 பேர் பலியாயினர். சிலர் காயமைடைந்தனர். இதில், இறந்தவர்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராஜலிங்கம், பொருளாளர் ரமேஷ் குமார், மாநகர தலைவர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.