உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மகளிர் கல்லூரியில் பி.எட்., வகுப்பு தொடக்கம்

அரசு மகளிர் கல்லூரியில் பி.எட்., வகுப்பு தொடக்கம்

வேலாயுதம்பாளையம்: தஞ்சை தமிழ் பல்கலை தொலைதூர கல்வி இயக்கத்தின் 2011- 2012 ம் ஆண்டுக்கான பி.எட்., வகுப்புகள் துவக்க விழா வேலாயுதம்பாளையம் அரசு மகளிர் கல்லூரியில் நடந்தது. விழாவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தீபா தொலைதூர கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் பி.எட்., கல்லூரி செயல்பாடுகளை விளக்கி பேசினார். வகுப்புகளை திரு ச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் முனைவர் நடேசன் தொடங்கி வைத்தார். மைய ஒருங்கிணைப்பு உதவியாளர் ஏனோக் ஜெபசிங் பெட்போர், விரிவுரையாளர் பிரியா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மேரி கரோலின் தலைமை உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ