உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

அரவக்குறிச்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாஸ்ட் புட் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டிகள், டீக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இட்லி, தோசை, சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்கள் மெழுகு தடவிய பேப்பர் மற்றும் வாழை இலை போன்ற வடிவில் உள்ள செயற்கை இலைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் கட்டிக் கொடுக்-கப்படுகிறது. மேலும் டீக்கடைகளில் கண்ணாடி டம்ளருக்கு பதி-லாக மெழுகு தடவிய பேப்பர் கப்புகளில் டீ வழங்குகின்றனர்.அதேபோல் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட பலகாரங்கள் காகிதங்-களில் சூடாக மடித்து தரப்படுகிறது. இவைகள் சூட்டில் உணவு பொருட்க-ளுடன் கரைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இவைகளை கட்டுப்-படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை