உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடிகால் வசதியின்றி பொதுமக்கள் அவதி

வடிகால் வசதியின்றி பொதுமக்கள் அவதி

கரூர்: கரூர், தெற்கு காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் வடக்கு, தெற்கு காந்திகிராமம் என, இரண்டு பகுதிகள் உள்ளன. தெற்கு காந்திகிராமம் பகுதியை சுற்றிலும் குடியிருப்போர்களின் எண்-ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், குடியிருப்-புகளின் நிலைக்கு ஏற்ப, இப்பகுதியில் போதியளவு சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்-கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, தெற்கு காந்திகிராமம் பகுதியில் மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி