உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழைத்தார் ரூ.320க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.320க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, கொம்பாடிப்பட்டி, கருப்-பத்துார், நந்தன்கோட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகு-படி செய்து வருகின்றனர்.விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்-பனை செய்யப்படுகிறது. இதில் பூவன் தார், 300 ரூபாய், கற்பூர-வள்ளி, 200 ரூபாய், ராஸ்தாளி, 320 ரூபாய் என்ற விலையில் விற்-பனை செய்யப்பட்டது. சில வாரங்களாகவே வாழைத்தார் விலை சீரான விலையில் உள்ளது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதி-களவில் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ