உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்

எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்

குளித்தலை: குளித்தலை நகராட்சியில் அண்ணா நகர்,மாரியம்மன் கோவில், காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சில நாட்களாக சரிவர எரியாததால், அப்பகுதி இருண்டு காணப்படுகிறது.இதனால், இரவு நேரங்களில் பொது மக்கள் தங்கள் வீடுக-ளுக்கும், கடைகளுக்கும் செல்வதில் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், பொது மக்-களை துரத்துகின்றன.பொது மக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் உள்ள, தெரு விளக்குகளை பராமரிப்பு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை