உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொறியியல் கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி

பொறியியல் கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி

கரூர் : கரூர் அரசு கலைக்கல்லுாரியில், பொறியியல் கல்லுாரிகளில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் அரசு கலைக்கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பொறியியல் கல்லுாரிகளில், 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த, 6 முதல் தொடங்கியுள்ளது. அதற்காக கரூர் அரசு கலைக்கல்லுாரியில், கணினி அறிவியல் துறை ஆய்வகத்தில், தொடங்கப்பட்டுள்ளது. அதில், பொறியியல் கல்லுாரியில் சேர, இந்த மையத்தின் மூலம் வரும், 20 வரையிலும், கலை அறிவியல் பிரிவுகளுக்கு வரும் ஜூன், 6 வரையிலும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ