களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் பகுதியில் உள்ள, நெல் வயல்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்-ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்-துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, வயல்களில் நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டது. இவை தற்போது துளிர்ந்து வளர்ந்து வருகிறது. பயிர்கள் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்து வருகிறது. எனவே இதை அகற்றும் பணியில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.