உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் பள்ளத்தால் அவதி

கரூர் பஸ் ஸ்டாண்டில் பள்ளத்தால் அவதி

கரூர்: கரூரில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பஸ் டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கடந்த, 1984ல் இருந்து தற்-போது உள்ள இடத்-தில் பஸ் ஸ்-டாண்ட் செயல்-பட துவங்-கி-யது. ஆரம்பத்-தில், 50 பஸ்-கள் நிறுத்-தப்-ப-டும் வகை-யில் இருந்த பஸ் ஸ்-டாண்ட், பின் நான்கு ஆண்டுகளில், 70 பஸ்-கள் வரை நிறுத்-தும் அள-வுக்கு விரி-வாக்-கம் செய்-யப்-பட்-டது. தமி-ழ-கத்-தில், 'ஏ' கிரேடு அந்-தஸ்து பெற்ற கரூர் பஸ் ஸ்-டாண்-டில் டவுன் பஸ்-க-ளும் தற்-போது நிறுத்-தப்-பட்டு வரு-கி-றது. அருகில், மினி பஸ் ஸ்டாண்டும் உள்ளது.கடந்த, 1995ல் கரூர் தனி மாவட்-ட-மாக அறி-விக்-கும் முன்-பாக டெக்ஸ்-டைல்ஸ், பஸ்- பாடி கட்-டும் தொழில் மற்-றும் கொசு-வலை உற்-பத்தி தொழி-லும் அதி-க-ரித்-தது. இத-னால் நாள்-தோ-றும் ஏரா-ள-மான தொழி-லா-ளர்-கள் திருச்சி, ஈரோடு, நாமக்-கல் உள்-ளிட்ட பகு-தி-க-ளில் இருந்து கரூ-ருக்கு வருகின்றனர். குறிப்-பாக நாள்-தோ-றும், 200க்-கும் மேற்-பட்ட பஸ்-க-ளும், ஆயி-ரக்-க-ணக்-கான பொது-மக்-க-ளும் கரூர் பஸ் ஸ்-டாண்-டுக்கு வரு-கின்-றனர்.குறுகிய இடத்தில் செயல்படும் கரூர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் டிரைவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் உள்ள பள்ளங்கள், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி