உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலைக்கு சென்ற திருமணமான இரு பெண் தொழிலாளி மாயம்

வேலைக்கு சென்ற திருமணமான இரு பெண் தொழிலாளி மாயம்

குளித்தலை : குளித்தலை அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்., லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் லட்சுமி, 45. இவர் மகள் மதுபாலா, 25. அதே ஊரை சேர்ந்த தனது தம்பி முனியப்பன் என்பவருக்கு, கடந்தாண்டு திருமணம் செய்து கொடுத்தார். மதுபாலா கரூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். கடந்த, 21 காலை, 10:00 மணியளவில் கம்பெனிக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவல் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.* சிந்தலவாடி பஞ்., புனவாசிபட்டியை சேர்ந்தவர் வேலாயுதம், 60, கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ், அதே ஊரை சேர்ந்த யுவபாரதி, 25, என்பவரை திருமணம் செய்துகொண்டு, தனி குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் யுவபாரதி, கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த, 21 காலை, 10:00 மணியளவில் வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும், வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து மாமனார் வேலாயுதம் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை