உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கரூர்,மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 958 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி வரை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1,824 கன அடியாக அதிகரித்தது. அதில், காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக, 1,304 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.58 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ