உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா

மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா

கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன. பருவமழை துவங்கிய நிலையில், மின்வெட்டை தவிர்க்க, செடிகொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெண்ணைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பல இடங்களில் உள்ள மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் செடி,கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன. இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர். இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், காற்றுடன் மழை பெய்கிறது. அப்போது, மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகள் மூலம், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பருவ மழை தீவிரமடையும் முன், மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ