உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது

சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது

அரவக்குறிச்சி, க.பரமத்தி அருகே, விஸ்வநாதபுரி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.க.பரமத்தி போலீசார், விஸ்வநாதபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்குள்ள அண்ணா நகர் பகுதியில், வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்ற சண்முகம் என்பவரின் மனைவி சித்ரா, 56, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை