கைதான 4 வாலிபர்கள் பல பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது அம்பலம்
கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த, 35 வயது பெண், கடந்த 19ல், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள மலைக்கு வந்தார். அவரை, 4 பேர் கும்பல் மிரட்டி நகை, பணத்தை பறித்-தது. அவர்களில், 2 பேர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதை மொபைலில் வீடியோ எடுத்தனர்.இது தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், அபிஷேக், கலையரசன் இருவரை கைது செய்தனர். தப்ப முயன்ற சுரேஷ், 22, என்பவரை சுட்டு பிடித்தனர். நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிந்தது. சுரேஷ், சிகிச்-சைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டுள்ளார். மற்ற, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சுரேஷ் உள்ளிட்ட 4 பேரின் மொபைலை ஆய்வு செய்ததில், 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவர்களை, சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் மிரட்டி பலாத்காரம் செய்யும் காட்சிகளும் இருந்தன. இதில் இளம்பெண்கள், கல்லுாரி மாணவியர் இருந்தனர். காதலர்க-ளுடன் மலைப்பகுதிக்கு வருவோரை கண்காணித்து, அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்ததுடன், இளம்பெண்-களை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், எந்த பகுதியை சேர்ந்-தவர்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான, 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்-ளனர். இதற்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதில், கைதான, 4 பேருடன் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என, விசாரிக்க தனிப்படை அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.