உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்

ராகவேந்திரர் கோவிலில்ஆராதனை மஹோத்ஸவம்கிருஷ்ணகிரி, ஆக. 22-கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ராம நாம ஜெபமும், வாசவி கான லஹரி குழுவினரின் பஜன் நிகழ்ச்சியும், ஸகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. நேற்று காலை, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், பஜனா மண்டலியினரின் பஜனை, சஹஸ்ர நாம அர்ச்சனை, மாலை, 7:00 மணிக்கு, ராகவேந்திரர் ஸ்வாமிகளின் திருவீதி உலா நடந்தது.இதேபோல், கிருஷ்ணகிரி செந்தில்நகரிலுள்ள ராகவேந்திரர் கோவிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழாவையொட்டி, சுப்ரபாதம், நிர்மால்ய அபிஷேகம், வேத பாராயணம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களார்த்தி, தீர்ப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை