உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்திலிருந்து விழுந்த 2 முதியவர்கள் பலி

மரத்திலிருந்து விழுந்த 2 முதியவர்கள் பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னகுதிபாலா பகுதியை சேர்ந்தவர் சாகுடி கவுண்டர், 70; இவர் கடந்த, 15ல் காலை, அப்பகுதியில் உள்ள புளியமரத்தில் ஏறி, புளியை பறித்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். ராயக்கோட்டை அடுத்த கொப்பக்கரையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65, விவசாயி; நேற்று முன்தினம் காலை, புளியமரத்தில் ஏறி புளியை பறித்தபோது, தவறி விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை