உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சாமனுாரை சேர்ந்தவர் யுவஸ்ரீ, 31; இவருக்கும் போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளியை சேர்ந்த புகழ்மணி, 31, என்பவருக்கும் கடந்த ஏப்., 16ல், திருமணமானது. அப்போது முதல், புகழ்மணி மற்றும் அவரது குடும்பத்தினர், யுவஸ்ரீயிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.இது தொடர்பாக யுவஸ்ரீ பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் புகழ்மணி, 31, அவரது தாய் இந்திராகாந்தி, 52, தந்தை முருகன், 62, உறவினர்கள் தமிழ்மணி, 35, வெங்கடேஷ் 22, கவிமணி, 33 ஆகிய, 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி