உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியரிடம் ரூ.5.54 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.5.54 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி:ஓசூர், மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அரவிந்தன், 28; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்., 15 ல் இவரது மொபைலில் வந்த விளம்பரத்தை பார்த்தார். அதில் ஆன்லைன் பகுதிநேர வேலை என்றும், முதலீட்டிற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது-. இதை நம்பி, அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு, 5.54 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன்பின், எந்த தகவலும் வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்தன், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ