உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இடம் பெயர்வோர் ஆதரவு மையம் திறப்பு

இடம் பெயர்வோர் ஆதரவு மையம் திறப்பு

ஓசூர்: ஓசூர் ஒன்றியம், பாகலுார் பஞ்.,ல், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், இடம் பெயர்வோர் ஆதரவு மையம் அமைக்கப்-பட்டுள்ளது. வேலை கிடைத்து தங்குமிடம் தேடி வரும் பெண்கள், 30 நாட்களுக்கு இந்த மையத்தில் இலவசமாக தங்கி கொள்ளலாம். 50 பேர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில், கட்டண உணவு, பல்பொருள் அங்காடி போன்ற வச-திகள் செய்யப்பட்டுள்ளன. இம்மையத்தை, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று திறந்து வைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன், பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, சாந்தலட்சுமி, பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி