உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் லோக் அதாலத் 1,587 வழக்குகளில் ரூ.6.11 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரியில் லோக் அதாலத் 1,587 வழக்குகளில் ரூ.6.11 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'லோக் அதாலத்' எனப்படும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம், 1,587 வழக்குகளில், 6.11 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா முன்னிலை வகித்தார். அப்போது, மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, ஒரு கோடிக்கான காசோலையை முதன்மை நீதிபதி வழங்கினார். மேலும், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில், நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதில், 1,587 வழக்குகளில், 6.11 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சாமுவேல் பெஞ்சமீன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நடுவர் இருதயமேரி மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை